Tuesday, February 26, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: நான்மணிக்கடிகை, நாட்டுப்புறப்பாட்டு

நான்மணிக்கடிகை:
*  ஆசிரியர்: விளம்பிநாகனார், விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் - இயற்பெயர்.
*  கடிகை என்றால் - அணிகலன் என்று பொருள்.
*  நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றன.
*  நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது எதன் பொருள் - நான்மணிக்கடிகை.
*  குடும்பத்தின் விளக்கு - பெண் என்றும், பெண்ணுக்கு விளக்கு பண்பில் சிறந்த பிள்ளைகள் மனத்திற்கினிய அன்புமிக்க பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி, என்ற கருத்து இப்பாடலில் வருகிறது.
*    பொருள்: மடவாள் - பெண், தகைசால் - பண்பில் சிறந்த, உணர்வு - நல்லெண்ணம், காதல்புதல்வர் - அன்பு மக்கள்.

நாட்டுப்புறப்பாட்டு:
*  எழுத்து வழியாக வராமல் வாய் வழியாக பரவுகின்ற பாட்டு அல்லது தாளில் எழுதாத பாடல் - நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
*  எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகள் - வாய்மொழி இலக்கியம் என்ப்படுகிறது.
*  சென்னை போன்ற பெருநகரங்களில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல் - கானா பாடல்.
*  பிறந்த குழந்தைகளுக்கு பாடுவது - தாலாட்டுப் பாடல்.
*  கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு பாடுவது - விளையாட்டுப்பாடல்.
*  வேலை செய்வோர் களைப்பு நீங்க பாடுவது - தொழிற் பாடல்
*  திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பாடப்பாடுவது - சடங்கு பாடல், கொண்டாட்டப் பாடல்.
*  சாமி கும்பிடுவோர் பாடுவது - வழிப்பாட்டுப் பாடல்.
*  இறந்தோர்க்கு பாடுவது - ஒப்பாரி பாடல்.
*  பொருள்: ஆனம் - குழம்ப, அகவிலை - தானியவிலை, நாழி -தானியங்களை அளக்கும் படி.
*  அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் என்ற நூலின் ஆசிரியர் - ஜானகி மணாளன்.
*  சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.
*  பழமொழியை சொலவடை என்றும் மக்கள் கூறுவர்.
*  தமிழ் சொற்கள் நான்கு வகைப்படும். அவை - பெயர், வினை, இடை, உரி.
*  சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திர நாத்
*  அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள் என்ற நூலை எழுதியவர் - ஜானகி மணாளன்.
*  கூடாரம் என்பதன் பொருள் - தாங்குதல்.
*  தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும் - நான்கு. அவை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.

No comments:

Post a Comment