Tuesday, February 26, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: திருக்குறள்

* இயற்றியவர் - திருவள்ளுவர். இவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
* திருவள்ளுவரின் காலம் - கி.மு.31. இந்த ஆண்டு பற்றி தெளிவான சான்றும் கிடைக்கவில்லை. பெற்றோர் பற்றிய தெளிவான சான்றும் கிடைக்கவில்லை.
* திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் - தெய்வப்புலவர், செந்நாபோதார், நாயனார், முதற்பாவலர், பொய்யில்புலவர், நான்முகனார், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர்.
* திருக்குறள் - உலகப் பொதுமறை எனவும் முப்பால் எனவும் வாயுறைவாழ்த்து எனவும் அழைக்கப்படுகிறது.
* திருக்குறள் - அறம் + பொருள் + இன்பம் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இயல்களின் எண்ணிக்கை 9.
* திருக்குறளின் 3 பிரிவுகள்: அறத்துப்பால் 38 அதிகாரங்களும், பொருட்பால் 70 அதிகாரங்களும், காமத்துப்பால் 25 அதிகாரங்களும்.
* திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* திருக்குறள் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் கொண்டது.
* திருகுறளுக்கு 10 பேர் உரையெழுதியுள்ளனர். அவற்றில் சிறந்த உரை பரிமேலழகர் எழுதிய உரை.குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டு +31 அதாவது 2012 என்பது திருவள்ளுவர் ஆண்டில் (2012+31) 2043 என்று கூறுவோம்.
* திருக்குறளின் சிறப்பு பெயர்: முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்திரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், பொருளுரை, முதுமொழி, திருவள்ளுவபயன்.
* முயற்சி திருவினை ஆக்கும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.பொருள்: வையகம் - உலகம், நண்பு - நட்பு, மறம் - வீரம், புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர், வற்றல்மரம் - வாடியமரம், என்பு - எலும்பு, ஆர்வலர் - அன்புடையர், வழக்கு - வாழ்க்கைநெறி.
If the fire is small the wind puts it outIf the fire is mighty, even the windhelps it grow.
சின்ன நெருப்பாய் திறமை இருந்தால்காற்று அதனை அணைக்கும்!காட்டு நெருப்பாய் திறமை இருந்தால்காற்றே அதனை வளர்க்கும்!

No comments:

Post a Comment