Monday, February 25, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: பறவைகள்

*   பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
*   உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
*   நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
*   சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்குணாங்குருவி.
*   நீர் நிலைகளில் வாழும் பறவைகள் - கொக்கு, தாழைக்கோழி,பவளக்காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
*   மலைகளில் வாழும் பறவைகள் - கிருவாச்சி, செந்தைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு, மரங்கொத்தி, சின்னங்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை.
*  பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.
*  வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலைமாற்றம் என அழைப்பர்.
*  அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
*  அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
*  நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
*  தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: வேடந்தாங்கல், கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்), கஞ்சிரால்குளம், சித்திரஸ்குடி, மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்), பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்), உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்), வடுவூர் (தஞ்சை மாவட்டம்) கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்), வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்), கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்).
*   தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

No comments:

Post a Comment