Tuesday, February 26, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

பெரியார்:
*  இயற்பெயர்: இராமசாமி்.
*  பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
*  பிறந்த ஊர்: ஈரோடு.
*  தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம் அகியன.
*  போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
*  தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் - சுயமரியாதை.
*  பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973
*  சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின் யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.
*  மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
*  பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.
*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.
*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தா - 13,12,000 கி.மீ
*  பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணிநேரம் உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.

புறநானூறு:
*  புறநானூறு = புறம் + நான்கு + நூறு.*  தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
*  இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
*  அதியமானின் நண்பர் - ஔவையார்.
*  சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
*  நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
*  ஔவை என்பதன் பொருள் - தாய்.பாடல் வரிகள்:எவ்வழி நல்லவர் ஆடவர்அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்
*  பொருள்: அவல் - பள்ளம், மிசை - மேடு, நல்லை - நன்றாகஇருப்பாய்.
*  திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர். ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.
*  காலம்: 26.02.1947 - 13.05.2000
*  பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.
*  பாடல்வரிகள் சில: "கடலின் நான் ஒரு முத்து"எத்தனை உயரம் இமயமலை- அதில்இன்னொரு சிகரம் உனதுதலை"பூமிப்பந்து என்ன விலை? -உன்புகழைத் தந்து வாங்கும் விலை

!பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்:
*  பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார்.
*  பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் - இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார். இவருடைய ஆசிரியர் - குறைவறவாசித்தான் பிள்ளை.
கல்வி:
*  தொடக்கக்கல்வி - கமுதியில் கிருஸ்தவ பாதிரியார்களிடம் - பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) - 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில். இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவர்றை கற்றறிந்தார்.
*  முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் - 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள்.
*  முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் - வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார்.
*  நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
*  சமபந்தி முறையை ஆதரித்தார்.
*  தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார்.
*  தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962)
*  தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர்.
*  சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை.
*  1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
*  தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது.
*  முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார்.
*  17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.
*  உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள்.
*  உம்பர் என்றால் மேலே என்று பொருள்.
*  உதுக்கண் - சற்றுத் தொலைவில் பார்.
*  கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு - 2001 சனவரி-1.
*  இவரின் கூற்றுகள்:
*  சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவதுபெருங்கொடுமை ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும்இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை.
*  வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும். பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.
*  மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார்.
*  மறைவு - 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்)
*  இலக்கணம்: சுட்டெழுத்துக்கள்- மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள். அவை: அ,இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது இல்லை)எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண் பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன.
*  அகச்சுட்டு - அவன், இவன்
*  புறச்சுட்டு - அப்பையன்
*  சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம்.
*  தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆஎ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்?
*  வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்?  யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்?
*  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏஎ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள்.
*  தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன்.
பொருள்:*  ஈரம்- அன்பு, அனைஇ-கலந்து, படிநு-வஞ்சம், அகன்-உள்ளம்,அமர்-விருப்பம், செம்பொருள்-சிறந்த பொருள், துவ்வாமை-வறுமை, அல்லவை-பாவம், நன்றி-நன்மை, சிறுமை-துன்பம், ஈன்றல்-தருதல், வனகொல்-கடுஞ்சொல், கவர்தல்-நுகர்தல்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:
*  செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
*  பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.
*  காலம்: 13.04.1930 - 08.10.1959
*  மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
*  தனது பாடல்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.
*  சில பாடல் வரிகள்:செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்திறமைதான் நமது செல்வம்"பயிரை வளர்த்தால் பலனாகும் - அதுஉயிரைக் காக்கும் உணவாகும்""காயும் ஒரு நாள் கனியாகும் -நம்கனவும் ஒரு நாள் நனவாகும்"

No comments:

Post a Comment