Wednesday, June 19, 2013

TETகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள்.

* வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- உற்று நோக்கல் முறை
* வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரியசிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
* வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்
* வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது
* வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பதுவகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
* வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் - மகிழ்ச்சியாக
* லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
* ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
* ரூஸோ பிறந்த நாடு - ஜெனீவா
* ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் - சோபி
* ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8
* ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
* யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
* மோரன்ஸ்களுக்கானநுண்ணறிவு ஈவு - 50 -69
* மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
* மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
* மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
* மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக- கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
* மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சூழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது
* மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
* மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
* மேலோங்கிய மனநிலை என்பதுமன எழுச்சி
* மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
* மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
* மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
* மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
* மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
* மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
* மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
* முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
* முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
* முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
* முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல்.
* முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
* முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணிபூனை
* முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு - தார்ண்டைக்
* முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் - 7
* முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
* முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
* முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
* முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
* முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
* முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு - 0-20
* மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
* மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்குவந்த ஆண்டு - 1978
* மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3-6
* மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் - 7
* மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
* மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகளை
* மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
* மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
* மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
* மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது - குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
* மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம் - ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் பண்புகள்வளரும்
* மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
* மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
* மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
* மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
* மாணவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்கள் - பள்ளிப் பாடல்கள், விளையாட்டுகள், உல்லாச பிரயாணம்
* மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி - அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
* மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
* மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்
* மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் -குழந்தை வீடு
* மனிதனின் வளர்ச்சியையும்,நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்
* மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
* மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
* மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்
* மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
* மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
* மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
* மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
* மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்பஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்றுகூறியவர் - கெம்ப்
* மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
* மனித நடத்தை பற்றிய உளவியல் கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது,கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல் - கல்வி உளவியல்
* மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
* மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன - மனவெழுச்சி நீட்சி
* மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்று கூறியவர் - பியாஜே
* மனப்போராட்டங்களின் வகைகள் - 3
* மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
* மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம்என்றவர் - ஃபிராய்டு
* மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. - உளவியலின் அடிப்படையில் மன நலம்
* மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
* மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
* மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
* மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
* மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
* மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
* மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
* மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் - எபிங்காஸ்
* மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
* மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
* மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
* மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
* மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள் - ஒரு கரு இரட்டையர்
* மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
* மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார?- கால்டன்.
* மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
* மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
* மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
* மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
* பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி - அச்சமும் சினமும்
* பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது. - 2வயதிற்கு மேல்
* பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்
* பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை
* பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - F.C.தார்ன்
* பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70
* பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை
* பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
* பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
* பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
* பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
* பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
* புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
* புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்
* புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்
* புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.

Sunday, June 9, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் - வாழ்வியல் கணக்குகள், வடிவியல்

TNTET PAPER - I - MATHS CHAPTER - I CLICK HERE...

TNTET PAPER - I - MATHS CHAPETER - II GEOMETRY CLICK HERE...

ஆக்கம்: ஒ.சங்கர் ப.ஆ [கணிதம்], குப்பமேட்டுப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம். 639104

Sunday, April 14, 2013

20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது, ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.முதல் தேர்வு: கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.கடினமான கேள்வித்தாள், குறைவான நேர ஒதுக்கீடு ஆகியவற்றால் திணறிய தேர்வர்கள், டி.ஆர்.பி., மீது சரமாரி புகார் தெரிவித்தனர். இதனால், அக்., 14ம் தேதி நடத்திய இரண்டாவது டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளில் கடினத்தை குறைத்ததுடன், தேர்வுக்கான நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக உயர்த்தியது.இரண்டாவது தேர்வில் ஆறுதல்:@@இதன் காரணமாக, தேர்ச்சி, 3சதவீதமாக அதிகரித்தது. 6.56 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம்தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மற்றும் இரண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு டிசம்பரில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.அடுத்த தேர்வு எப்போது? எனினும், இன்னும், 20 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் மே மாதத்திற்குள் நடத்தி முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், புதிய ஆசிரியர்கள், பணியில் சேரும் வகையில், முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.,யின் மெத்தனம் காரணமாக, இத்திட்டம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.தேர்வர்களும், அடுத்த டி.இ.டி., தேர்வை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினமும், ஏராளமான தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), விசாரித்தபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., தரப்பில், எவ்வித தகவலும் தரப்படவில்லை.டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,தேர்வு குறித்த அறிவிப்புவெளியாகும் தேதிக்கும், தேர்வு நடக்கும் தேதிக்கும், குறைந்தபட்சம், இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும் வகையில், தேர்வு அட்டவணையை நிர்ணயிப்போம். ஜூன், அல்லது ஜூலையில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என, தெரிவித்தன.மாணவர்களுக்கு பாதிப்பு: இரண்டாவது தேர்வு நடந்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. மே மாதத்தில் தேர்வை நடத்தி, விரைவாக முடிவை வெளியிட்டுருந்தால், புதிய ஆசிரியர்கள், பள்ளியில் சேரவசதியாக இருந்திருக்கும். ஜூலைக்குப் பின், தேர்வை நடத்தினால், அவர்கள், பணியில் சேர்வதற்குள் அரையாண்டு தேர்வே வந்துவிடும். இதனால், கல்வி ஆண்டு துவங்கி, முதல் ஆறு மாதங்கள், ஆசிரியர் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட தேர்வை, டி.ஆர்.பி., விரைவாக வெளியிட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வைமுதல் தேர்வு (ஜூலை, 2012)முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)எழுதியோர்-2,83,817தேர்ச்சி-1,735சதவீதம்-0.55இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)எழுதியோர்-3,83,666தேர்ச்சி-713சதவீதம்-0.17இரண்டாவது தேர்வு (அக்., 2012)முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)எழுதியோர்-2,78,725தேர்ச்சி பெற்றோர்-10,397சதவீதம்-3.73இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)எழுதியோர்-3,77,973தேர்ச்சி பெற்றோர்-8,849சதவீதம்-2.34Share

Tuesday, March 19, 2013

TET - MATERIALS-177 pages new.

Click here & Download
இது முழுமையாக இணையத்தில் தேடித் தொகுத்ததாகும். இதில் கணிதம் தவிர பிற பாடங்கள் உள்ளன.மொத்த பக்கங்கள் 177. PDF FILE இன் அளவு 1.89MB.

MATHS - STUDY MATERIAL

Click here & Download
இது ஒரு சிறப்பிதழில் வெளிவந்தது. இதில் கணித கருத்துக்களும், வினாக்களும், அதற்கான விடைகளை முழுமையான விளக்கத்துடனும்  கொடுத்துள்ளனர். அனைவரும் இதனைப் பயன்படுத்தும் பொருட்டு Scan  செய்து இங்கு பதிவேற்றியுள்ளேன். மொத்த பக்கங்கள்: 50, PDF இன் அளவு 11.6 MB.

Wednesday, March 13, 2013

TNTET & TNPSC STUDY MATERIALS IN SUBJECT WISE

கல்வி உளவியல் பாடக்குறிப்புகள்

அக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்

தமிழ் பாடக்குறிப்புகள்

ஆங்கில பாடக்குறிப்புகள்

கணிதம் - பாடக்குறிப்புகள்

அறிவியல் - பாடக்குறிப்புகள்

சமூக அறிவியல் பாடக்குறிப்புகள்

ஒரு முழு புத்தகம்

TNPSC முழு புத்தகம்

மற்ற - கற்றல் குறிப்புகள்

வங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள

TNPSC AND TNTET STUDYMATERIALS IN MP3 FORMATE - GOOGLE ACCOUNT NEEDED..

வரலாறு - MP3

சமீபத்திய நிகழ்வுகள் - ஓர் ஆண்டிற்கு முந்தியது MP3

பொருளியல் - MP3

குடிமையியல் - MP3

தமிழ் - MP3

GK - MP3

தமிழ் இலக்கணம் -MP3

புவியியல் - MP3

Monday, March 11, 2013

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் – Child Development and Pedagogy-வினா – விடை!

1. குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் – Child Development and Pedagogy

1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
2. நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் ‘ஒலி எழுப்புக’ என்பதற்கு பதில்…?   -  ஒலி எனக்கு (Sound to me)
3. கவனம் – புலன் காட்சிகள் அடிப்படையாகும்.
4. கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்துகாணப்படுகிறது.
5. ஒருவனுடைய கற்கும்திறன் உடல் – உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
6. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா
7.முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.
8.கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
9. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
10. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு – தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
11. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்
12. ஒப்புடைமை விதி என்பது – குழுவாக எண்ணுதல்.
13. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? – ஐந்து
14. மனிதனின் புலன் உறுப்புகள் – அறிவின் வாயில்கள்.
15. ”உளவியல் என்பது நனவு நிலை பற்றியது” இதனை வலியுறுத்தியவர் – வாட்சன்
16. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் –கான்ட்
17. உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் – கான்ட்
18. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் – குரோ,குரோ
19. எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை – போட்டி முறை
20. நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை – அகநோக்கு முறை.
21. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை – கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
22. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை – வினாவரிசை முறை.
23. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல்அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.
24. தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை – பரிசோதனை முறை.
25. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை – பரிசோதனை முறை.
26. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் – மாண்டிசோரி.
27. டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
28. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் – மாஸ்லோ
29. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
30. சமூக மனவியல் வல்லுநர் – பாவ்லாவ்
31. முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் – ஜான்டூயி
32. மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக்குறிக்கும் – அடிப்படைத் தேவைகள்.
33. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் – ஃபிராய்டு.
34. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தைஅறிமுகப்படுத்தியவர் – மெக்லிலாண்டு.
35. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் – ஏ.எஸ். நீல்
36. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் – தார்ண்டைக்
37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் – டார்வின்
38. மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? – மனவெழுச்சி நீட்சி
39. குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
40. ‘சோபி’ என்பது என்ன? – ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
41.உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் – கோஹலர்
42. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் – சுல்தான்.
43. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது – பால்லாவ்.
44. மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் – அறிவுத்திறன் வளர்ச்சி.
45. மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் – மனவெழுச்சி.
46. சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது – பெரு மூளை.
47. ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும்என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? – மூன்றாம் நிலை.
48. பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன்அதிகம் தொடப்புடையது?  – உடல் தேவை
49. அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக்கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
50. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? – ஏழு
51. நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை – உற்று நோக்கல் முறை.
52. மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை
53. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  – சூழ்நிலை.
54. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  – மெண்டல்
55. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  – அயோவா
56. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் – மக்டூகல்
57. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? – மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
58. உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
59. உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் – வாட்சன்.
60. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
61. பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
62. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை – மதிப்பீட்டு முறை
63. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை – உற்று நோக்கல் முறை
64. உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை
65. அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது – மரபு+ சூழ்நிலை
66. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் – மனவெழுச்சி வளர்ச்சி.
67. சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும்செயல்கள் – அறிவுத் திறனால்.
68. உடலால் செய்யப்படும் செயல்கள் எத? – நீந்துதல்.
69. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் – பியாஜே
70. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? – கால்டன்.
71. வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும்உளவியல் காரணி எது? – நுண்ணறிவு.
72. கற்றல் – கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? – கல்வி உளவியல்
73. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.
74. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் – மெய்விளக்கவியல்.
75. ‘உன்னையே நீ அறிவாய்’ எனக் கூறியவர் – சாக்ரடீஸ்
76. உற்றுநோக்கலின் படிகள் – ஏழு
77. உற்றுநோக்கலின் இறுதிப்படி – நடத்திய ஆய்வு செய்தல்
78. வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன்அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.
79. பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? – கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
80. மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது – தர்க்கவியல்
81. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் – தொட்டுணரும் பருவம்.
82. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் – கார்ல் பியர்சன்
83. அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் – இலத்தீன் மொழிச் சொல்
84. குரோமோசோம்களில் காணப்படுவது – ஜீன்ஸ்
85. குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் – லிப்டன்
86. திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் – சூழ்நிலை
87. ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் – இல்பொருள் காட்சி
88. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.
89. பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன – புத்தகம்.
90. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
91. ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் – சுவிட்சர்லாந்து
92. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் –பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
93. குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க – பேச்சுக்கு முந்தைய நிலை
94. கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை – கற்பனை
95. ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாகஇருப்பின் யாது? – மீள் ஆக்கக் கற்பனை.
96. நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது – படைப்புக்கற்பனை.
97. ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.
98. எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் – எட்டு.
99. கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று – கவர்ச்சி
100. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை – பல்புலன் வழிக்கற்றல்.

2.WHO IS WHO IN PSYCHOLOGY

1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் – டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology – கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் – வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) – ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் – வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் – சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் – மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் – பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் – ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் – கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு – கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் – பாவ்லவ் Irvanpetrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் – தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) – வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு – ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் – கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை – ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு – ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் – வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை – தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை – எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை – ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை – வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு – பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு – ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு – தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை – எபிங்காஸ் – H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு – பார்ட்லட்
31. அடைவூக்கம் – டேவிட் மெக்லிலெண்ட்
32. படிநிலைக் கற்றல் கோட்பாடு – காக்னே
33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்
34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு – டெம்போ(Dembo)
35. பார்வைத் திரிபுக் காட்சி – முல்லர், லயர்
36. முதன்மைக் கற்றல் விதிகள் – தார்ண்டைக்
37. நவீன உளவியலின் தந்தை – பிராய்டு
38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் – ஸ்டான்லி ஹால்
39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை – யூங்
40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை – முர்ரே – மார்கன்.
41. மைத்தடச் சோதனை – ஹெர்மான் ரோர்சாக்
42. பகுப்பு உளவியல் – கார்ல் ஜி யூங்
43. தனி நபர் உளவியல் – ஆட்லர்
44. உளப்பகுப்புக் கோட்பாடு – சிக்மண்ட் பிராய்ட்
45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை – சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர்,  யூங்
46. வகைப்பாடு – அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – ஐசன்க்(H.J.Eysenck)
47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
48. வகைப்பாடு ஆளுமை கொள்கை – ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் –தர்ஸ்டன், லிக்கர்ட்
50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் – பிரெஸ்ஸி
51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் – ஸ்டிராங்
52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் –கூடர் (G.F.Kuder)