Tuesday, February 26, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: நாலடியார்

*   நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.
*   நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.
*   நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
*   நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் - நாலடியார்.
*   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்கள்.
*   பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது - 18
*   பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து மேல்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது.
*   சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர்.
*   பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் - சங்க நூல்கள் என அழைக்கப்படுகின்றன.பொருள்: அணியர் - நெருங்கி இருப்பவர், சேய் - தொலைவு, செய் - வயல், பதினெண் - பதினெட்டு.

No comments:

Post a Comment